செய்திகள்

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

Published On 2019-03-28 11:08 GMT   |   Update On 2019-03-28 11:08 GMT
கள்ளக்குறிச்சியில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019 #UdhayanidhiStalin
கள்ளக்குறிச்சி:

பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவ்வகையில் கடந்த 23-ந்தேதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க. வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக 3 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று புகார் கூறப்பட்டது.

இதையடுத்து தேர்தல் பறக்குப்படை அலுவலர் முகிலன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் 143,341,188 ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  #LokSabhaElections2019 #UdhayanidhiStalin
Tags:    

Similar News