செய்திகள்

போடியில் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

Published On 2019-06-11 11:45 GMT   |   Update On 2019-06-11 11:45 GMT
போடியில் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:

போடி சங்காரபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுமதி (வயது28).பெயர் மாற்றப்பட்டுள்ளது. பி.காம். பட்டதாரியான இவர் வங்கியில் புதிய கணக்கு தொடங்குவதற்காக அதே பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார்.

அப்போது வங்கி துணை மேலாளர் முத்துசிவகார்த்திகேயன் அவரது செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு பேசி உள்ளார்.

பின்னர் வேலை வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த வீடியோவை காட்டி சுமதியிடம் தனது நண்பர்களிடமும் உல்லாசமாக இருக்குமாறு மிரட்டி உள்ளார். அதன்படி அவரை 12 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து சுமதியின் கணவர் அளித்த புகாரின் பேரில் வங்கியின் துணை மேலாளர் முத்துசிவ கார்த்திகேயன் மற்றும் ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் 10 பேரை தேடி வந்த நிலையில் வங்கியில் லோன் பிரிவில் பணியாற்றும் சூலப்புரத்தை சேர்ந்த பாண்டீஸ்வரன் (33), சதீஷ்குமார் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News