செய்திகள்

அ.ம.மு.க. நிர்வாகிகள் முதல்-அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

Published On 2019-06-11 04:21 GMT   |   Update On 2019-06-11 04:21 GMT
காஞ்சிபுரம், நெல்லை மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் முதல்-அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
சென்னை:

அ.ம.மு.க. காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மாவட்ட பேரவை தலைவர் என்.டி.சரவணன், மொளச்சூர் ஊராட்சி கிளை செயலாளர் எம்.தாமோரன், குன்றத்தூர் ஒன்றிய பொருளாளர் ஏ.முனியன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.ராமகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

குன்றத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அய்யப்பன்தாங்கல் ஊராட்சி 9-வது வார்டு செயலாளர் எம்.எஸ்.முனுசாமி, தி.மு.க.வை சேர்ந்த எம்.செந்தில், எம்.தனசேகரன் ஆகியோரும் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

அ.ம.மு.க. நெல்லை மாநகர் மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர்களான திருமலைக்குமார், கே.அருணகிரி, மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு பொருளாளர் ருசி எம்.அன்சார் உள்பட நிர்வாகிகளும், நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் பி.எஸ்.அருள்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் பி.எல்.சி.பாலசுப்பிரமணியன், இணை செயலாளர் கே.வெள்ளத்துரை, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் பொன்.முத்துவேல்சாமி உள்பட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த இணைப்பு நிகழ்ச்சி சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்- அமைச்சர் இல்லத்தில் நேற்று நடந்தது.

Tags:    

Similar News