செய்திகள்

ஜூன் 12ந் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- அ.தி.மு.க. அறிவிப்பு

Published On 2019-06-09 07:04 GMT   |   Update On 2019-06-09 07:04 GMT
சென்னையில் வருகிற 12-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை: 

மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேற்று செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும்.  அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை.  ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை.  கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது. நெருடலை போக்க எல்லோரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும்.  2 தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும்  நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் வலியுறுத்துவோம் என கூறினார்.

இதனிடையே, ராஜன் செல்லப்பாவின் கருத்தை வரவேற்பதாக கே.சி. பழனிசாமி, குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இன்று தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில், சென்னையில் வருகிற 12-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் பங்கேற்க உள்ளனர். 

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பற்றி எம்.எல்.ஏ.க்கள் பேச தொடங்கியுள்ள நிலையில் கட்சியின் இந்த முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள், கட்சி தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.  
Tags:    

Similar News