செய்திகள்

மனைவி தற்கொலை: கணவன்-கள்ளக் காதலிக்கு 5 வருட சிறை தண்டனை

Published On 2019-06-08 17:04 GMT   |   Update On 2019-06-08 17:04 GMT
கிருஷ்ணகிரி அருகே மனைவி தற்கொலை சம்பவத்தில் கணவன்-கள்ளக் காதலிக்கு 5 வருட சிறை தண்டனை அளித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகே உள்ள மாதிநாயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராஜ் (31). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சுமித்ரா (20) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. 

ஆனால் அதற்கு முன்பாகவே அதேஊரை சேர்ந்த ராதா (26) என்பவருடன் திம்மராஜிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் திருமணமாகி 29-வது நாளான 20.10.2013 அன்று கள்ளக்காதலி வீட்டில் இருந்த திம்மராஜை, அவரது மனைவி சுமித்ரா சென்று அழைத்துள்ளார். அப்போது அவர் வரமறுத்து உள்ளார். இதனால் மனமுடைந்த சுமித்ரா வீட்டிற்குவந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து மகாராஜகடை போலீசார் வழக்குபதிவு செய்து, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், மனைவியின் தற்கொலைக்கு காரணமான கணவன் திம்மராஜ், அவரது கள்ளக்காதலி ராதா ஆகியோருக்கு தலா 5 வருட சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.
Tags:    

Similar News