செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு

Published On 2019-06-08 07:33 GMT   |   Update On 2019-06-08 07:33 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.25,136-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை சில மாதங்களுக்கு முன்பு “கிடுகிடு” வென உயர்ந்து பவுன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது. பவுன் ரூ.26 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் மீண்டும் விலை குறைந்து ரூ.24 ஆயிரத்துக்கு வந்தது.

தற்போது மீண்டும் விலை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் (மே) 30-ந்தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 248 ஆக இருந்தது. பின்னர் விலை படிப்படியாக உயர்ந்தது.

நேற்று ரூ. 48 அதிகரித்து ரூ.24 ஆயிரத்து 976 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு மேலும் ரூ.152 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 136 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கிராமுக்கு ரூ.19 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,142-க்கு விற்கிறது.

தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தற்போது திருமண சீசன் என்பதாலும் விலை அதிகரித்துள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

வெள்ள கிலோவுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.40.30க்கு விற்கிறது.
Tags:    

Similar News