செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2019-06-05 18:26 GMT   |   Update On 2019-06-05 18:26 GMT
உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் விதமாக பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கீரமங்கலம்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் விதமாக பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னால் பேரூராட்சி தலைவர் துரை முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து அறந்தாங்கி வனத்துறை அதிகாரி ராஜேந்திரன், மரம் தங்க கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு மாணவர் களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். பின்னர் ராஜேந்திரன் பேசுகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுபடுவதை தடுத்து வெப்பத்தை குறைக்க மரக்கன்றுகள் வளர்ப்பது மிகவும் அவசியம். அதனால் ஒவ்வொரு மாணவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஈஷா யோகா பசுமைக்கரங்கள் திட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News