செய்திகள்

திருபுவனை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-06-05 10:07 GMT   |   Update On 2019-06-05 10:07 GMT
திருபுவனை அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் காதல் திருமணம் செய்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை:

திருபுவனை அருகே கலிதீர்த்தாள் குப்பம் வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜவேலு. இவர் வடமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வினிதா (வயது 23).

இவர்கள் இருவரும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

ராஜவேலுவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை வினிதா கண்டிக்கும் போது கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இதுபோல் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராஜவேலு வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில் வினிதா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார்.

வீட்டில் இருந்த எலி மருந்தை (வி‌ஷம்) பாலில் கலந்து குடித்தார். சிறிது நேரம் கழித்து வெளியே சென்றிருந்த ராஜவேலு வீடு திரும்பிய போது, மனைவி வி‌ஷம் குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வினிதாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வினிதா அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று வினிதா பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரியா, பிரதாபன், ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News