செய்திகள்
கோடம்பாக்கத்தில் வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை
சென்னை கோடம்பாக்கத்தில் குடும்ப தகராறு காரணமாக வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
கோடம்பாக்கம் ரங்கராஜ புரத்தில் வசித்து வந்தவர்கள் வடிவேலு- அமுதா.
வயதான தம்பதியான இவர்கள் தனியாக வசித்து வந்தனர். ஒரு மகள் தண்டையார்பேட்டையில் வசித்து வருகிறார். மகன் மலேசியாவில் உள்ளார். வடிவேலு-அமுதா இருவருக்கும் இடையே நேற்று இரவு குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதில் 2 பேரும் மண் எண்ணை ஊற்றி தீக்குளித்தனர். அருகில் இருந்தவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கோடம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
கோடம்பாக்கம் ரங்கராஜ புரத்தில் வசித்து வந்தவர்கள் வடிவேலு- அமுதா.
வயதான தம்பதியான இவர்கள் தனியாக வசித்து வந்தனர். ஒரு மகள் தண்டையார்பேட்டையில் வசித்து வருகிறார். மகன் மலேசியாவில் உள்ளார். வடிவேலு-அமுதா இருவருக்கும் இடையே நேற்று இரவு குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதில் 2 பேரும் மண் எண்ணை ஊற்றி தீக்குளித்தனர். அருகில் இருந்தவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கோடம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.