செய்திகள்

காயிதேமில்லத் 124-வது பிறந்தநாள் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை போர்த்துகிறார்

Published On 2019-06-03 10:11 GMT   |   Update On 2019-06-03 10:11 GMT
காயிதேமில்லத் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 5-ந்தேதி அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்துகிறார்.
சென்னை:

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 8.00 மணியளவில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாசா பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்துகிறார்.

அப்போது, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. தலைமைச் செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக-வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News