செய்திகள்

எழும்பூரில் இன்று இப்தார் நோன்பு திறப்பு- திருமாவளவன் பங்கேற்பு

Published On 2019-05-29 09:56 GMT   |   Update On 2019-05-29 09:56 GMT
எழும்பூரில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு இப்தார் உரையாற்றுகிறார்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் மாநில பொருளாளர் மு.முகமது யூசுப்தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை எழும்பூர் பைஸ் மகாலில் நடக்கிறது. இதில் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு இப்தார் உரையாற்றுகிறார். 

பேரவை மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மண்டல செயலாளர் முபாரக், மாநில துணை செயலாளர் சைதை ஜபார், கரிமுல்லாகான், முகமது ஷாகீர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீனஸ் இம்ரான்செய்து வருகிறார்.

Tags:    

Similar News