செய்திகள்
சவுதி விமானத்தில் சென்னை வந்த முன்னாள் குற்றவாளி கைது
சென்னைக்கு வந்த சவுதி விமானத்தில் 7 வருடங்களுக்கு முன்பு தலைமறைவான முன்னாள் குற்றவாளியை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
துபாயில் இருந்து நேற்று இரவு சவுதி விமானம் ஒன்று சென்னை வந்தது.
இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களுடைய பாஸ்போர்ட்களும் சரி பார்க்கப்பட்டது.
அப்போது ரியாத்தில் இருந்து திரும்பிய நாகராஜ் (35) என்பவருடைய பாஸ்போர்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை.
7 வருடங்களுக்கு முன்பு வாகனம் மோதி ஒருவர் உயிர் இழந்தார். அதன்பிறகு தலைமறைவான அவர் துபாய் சென்றுவிட்டார்.
விபத்து தொடர்பான வழக்கை முடிக்காமல் சென்றதால் நாகராஜ் தேடப்படும் குற்றவாளி என்று விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்தார். இது சென்னை விமான நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த நாகராஜ் தேடப்படும் குற்றவாளி என்பதை குடியுரிமை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து, அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் நாகராஜை விருதுநகர் போலீசார் அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்றது.
துபாயில் இருந்து நேற்று இரவு சவுதி விமானம் ஒன்று சென்னை வந்தது.
இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களுடைய பாஸ்போர்ட்களும் சரி பார்க்கப்பட்டது.
அப்போது ரியாத்தில் இருந்து திரும்பிய நாகராஜ் (35) என்பவருடைய பாஸ்போர்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை.
7 வருடங்களுக்கு முன்பு வாகனம் மோதி ஒருவர் உயிர் இழந்தார். அதன்பிறகு தலைமறைவான அவர் துபாய் சென்றுவிட்டார்.
விபத்து தொடர்பான வழக்கை முடிக்காமல் சென்றதால் நாகராஜ் தேடப்படும் குற்றவாளி என்று விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்தார். இது சென்னை விமான நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த நாகராஜ் தேடப்படும் குற்றவாளி என்பதை குடியுரிமை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து, அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் நாகராஜை விருதுநகர் போலீசார் அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்றது.