செய்திகள்

காங்கயத்தில் கார் மீது லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் காயம்

Published On 2019-05-26 17:34 GMT   |   Update On 2019-05-26 17:34 GMT
காங்கயத்தில் கார் மீது லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார். இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையம் போலீசில் சப்-இன்ஸ் பெக்டராக வேலை பார்த்து வருபவர் முருகானந்தம் (55). இவர் வெள்ளகோவில் போலீஸ் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.நேற்று இரவு பணி முடிந்து சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தனது காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். இன்று காலை 6.45 மணியளவில் கோவை-கரூர் சாலையில் காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி கார் மீது மோதியது. விபத்து ஏற்பட்டதும் காரில் இருந்த பலூன் விரிந்ததால் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் லேசான காயத்துடன் தப்பினார். அவர் காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை காங்கயம் டி.எஸ்.பி. செல்வம் பார்த்து விபத்து குறித்து கேட்டறிந்தார். இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News