செய்திகள்
சேலத்தில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பரிதாப பலி
சேலம் அருகே கந்தம்பட்டியில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தின் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்ற லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், பாலு, சாதிக் பாஷா, ரகுமத் பாஷா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விபத்தில் பலியானோர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.