செய்திகள்

பல்லடம் அருகே கார் மீது வேன் மோதி சிறுவன் பலி

Published On 2019-05-25 09:26 GMT   |   Update On 2019-05-25 09:26 GMT
பல்லடம் அருகே கார் மீது வேன் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன் பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நடராஜ். விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களது மகன் கவின் (11).இவர்கள் மாருதி காரில் பல்லடத்திற்கு மளிகை பொருட்கள் வாங்க வந்தனர். இவர்களுடன் நடராஜ் தம்பி மனைவி பூங்கொடி, மகன் கவுசிக் ஆகியோரும் வந்தனர்.

பல்லடத்தில் மளிகை பொருட்கள் வாங்கி விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கிருஷ்ணாபுரம் பிரிவில் சென்று கொண்டு இருந்த போது பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி வந்த சரக்கு வேனும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலே சிறுவன் கவின் பரிதாபமாக இறந்தான். மற்ற 4 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மீது மோதிய சரக்கு வேன் ரோடு ஓரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. அதனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News