செய்திகள்
மந்திரி சபையில் இடம்பெறுவதற்காக வெற்றி பெறவில்லை- ரவீந்திரநாத்குமார்
மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றி பெறவில்லை, மக்களின் நலன்தான் முக்கியம் என்று ரவீந்திரநாத்குமார் கூறினார்.
மதுரை:
தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் வெற்றி பெறுவதற்காக பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றிபெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது. மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன்.
தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியடைந்துள்ளது. அதற்கான காரணம் கண்டறியப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்னை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றிபெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது. மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன்.
தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியடைந்துள்ளது. அதற்கான காரணம் கண்டறியப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.