செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - ஊராட்சி செயலாளர் சஸ்பெண்டு

Published On 2019-05-23 14:55 GMT   |   Update On 2019-05-23 14:55 GMT
கோவை அருகே பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த ஊராட்சி செயலாளரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெல்லித்துறை ஊராட்சியில் செயலாளராக மோகன் ராஜ் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜடையம் பாளையம் ஊராட்சி செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இந்த ஊராட்சியில் கலெக்டரின் உத்தரவின்றி தன்னிச்சையாக கணினி உதவியாளராக ஒரு பெண்ணை பணி நியமனம் செய்துள்ளார்.

மேலும் பணி நேரத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகார் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு வந்தது. கலெக்டர் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் ஊராட்சி செயலாளர் மோகன்ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முறைகேடு சம்பந்தமாக காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News