செய்திகள்

பு.புளியம்பட்டி அருகே அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் படுகாயம்

Published On 2019-05-23 11:28 GMT   |   Update On 2019-05-23 11:28 GMT
பு.புளியம்பட்டி அருகே அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பு.புளியம்பட்டி:

கோவையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி குளம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக கார்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்காக ஒரு கார் புங்கம்பள்ளி அருகே வந்தது. அப்போது புங்கம்பள்ளி குளம் அருகே வந்த போது அரசு பஸ் மற்றும் கார் எதிர் பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. அப்போது பஸ்சில் வந்த பயணிகள் அலறினர்.

இதில் கார் அப்பளம் போல் நொருங்கியது. பஸ்சின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் மற்றும் காரில் பயணம் செய்த 2 பேர் என மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந் தனர்.

அவர்கள் 108 ஆம்புலன்சு மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் மூலம் உடனடியாக மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News