செய்திகள்

டி.என்.பாளையம் அருகே டெய்லர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-05-23 10:16 GMT   |   Update On 2019-05-23 10:16 GMT
டி.என்.பாளையம் அருகே டெய்லர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள பள்ளத்து மேடு வானிபுதூரை சேர்ந்தவர் பிரபு(28). இவர் அப்பகுதியை சேர்ந்த பூங்கோதை(22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சேரன்(6), தீரன்(1) என 2மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிரபு கோபியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி கண்டித்தார். இதில் விரக்தி அடைந்த பிரபு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடைந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பூங்கோதைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.

இது குறித்து பங்களா புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News