செய்திகள்

தேனி அருகே மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2019-05-23 09:45 GMT   |   Update On 2019-05-23 09:45 GMT
தேனி அருகே மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:

தேனி மாவட்டம் கோம்பை ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் மணி பிரபு (வயது 32). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனது தாயாரிடம் செலவுக்கு பணம் கேட்டார். அதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி மணிபிரபுவின் மனைவி நதியா கொடுத்த புகாரின் பேரில் கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News