செய்திகள்

ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை

Published On 2019-05-22 11:42 GMT   |   Update On 2019-05-22 11:42 GMT
சங்கரன்கோவில் அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 60). இவர் பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவரின் மனைவியும் மகன்களுடன் தங்குவதற்காக சென்று விட்டாராம். இதனால் தனிமையில் ஜெயராஜ் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனிமையில் இருந்த ஜெயராஜ் பூச்சி மருந்தை குடித்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்தவரை மீட்ட அவரின் உறவினர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News