செய்திகள்

ஆரணி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

Published On 2019-05-21 18:04 GMT   |   Update On 2019-05-21 18:04 GMT
ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி:

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள சக்திநகரில் கடந்த 7 மாதமாக குடிநீர் சரியாக வழங்காததை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று காலை ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் சக்திநகரில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, பாரதி, ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், 3 நாட்களில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
Tags:    

Similar News