செய்திகள்

சிங்கப்பூர் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்

Published On 2019-05-20 03:54 GMT   |   Update On 2019-05-20 03:54 GMT
சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னை:

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 170 பயணிகள் பயணித்தனர். விமானம் சென்னையை நெருங்கியபோது எஞ்சினில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதனால் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

விமானத்தை தரையிறக்க சென்னை விமான நிலையம் அனுமதி அளித்தது. அத்துடன் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.



தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News