செய்திகள்
கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 8 லட்சம் மோசடி - கணவன், மனைவி மீது புகார்
கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 8 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவி மீது புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை:
கோவை வெள்ளலூர் ஆர்.கே. கார்டன் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (60), இவரது மனைவி சுப்புலட்சுமி (58). இவர்கள் இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.
இவர்களிடம் வெள்ளலூர் தேனீஸ்வரர் கோவில் வீதியை சேர்ந்த தனராஜ் மற்றும் அவரது உறவினர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர்.
ஆனால் சீட்டு முடிந்த பின்னரும் கணவன் - மனைவி பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இது குறித்து தனராஜ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
அதில் பாலகிருஷ்ணனும் அவரது மனைவி சுப்பு லட்சுமியும் ரூ. 8 லட்சம் வரை மோசடி செய்து உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை வெள்ளலூர் ஆர்.கே. கார்டன் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (60), இவரது மனைவி சுப்புலட்சுமி (58). இவர்கள் இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.
இவர்களிடம் வெள்ளலூர் தேனீஸ்வரர் கோவில் வீதியை சேர்ந்த தனராஜ் மற்றும் அவரது உறவினர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர்.
ஆனால் சீட்டு முடிந்த பின்னரும் கணவன் - மனைவி பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இது குறித்து தனராஜ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
அதில் பாலகிருஷ்ணனும் அவரது மனைவி சுப்பு லட்சுமியும் ரூ. 8 லட்சம் வரை மோசடி செய்து உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.