செய்திகள்

நெட்டப்பாக்கத்தில் தனியார் கம்பெனி ஊழியர் மீது தாக்குதல்- 3 பேர் கைது

Published On 2019-05-15 14:27 GMT   |   Update On 2019-05-15 14:27 GMT
நெட்டப்பாக்கத்தில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சேதராப்பட்டு:

நெட்டப்பாக்கத்தை அடுத்த கல்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 28). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை கேண்டீனில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இவர் கம்பெனியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை வீரமணி முந்திச் சென்றார்.

இதில், ஆத்திரம் அடைந்த 4 பேரும் வீரமணியை பின்தொடர்ந்து சென்று கல்மண்டபத்தில் வைத்து மறித்து எங்களை எப்படி முந்திச்செல்லலாம்? எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஒருவர் மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்து வீரமணியை குத்தினார். காயம் அடைந்த வீரமணி இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் விபல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வீரமணியை தாக்கியது நெட்டப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்பது தெரியவந்தது.

மேலும் அவருடன் வந்தது பண்டசோழநல்லூரை சேர்ந்த பார்த்திபன் (27). நெட்டப்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் (20) மற்றும் அவரது நண்பர் கார்த்திக் என்பதும் தெரிந்தது.

இதில், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கார்த்திக்கை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News