செய்திகள்
மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை
மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது42). முன்னாள் ராணுவ வீரர். தற்போது கேரளாவில் ஜீப் ஓட்டி வருகிறார். இவருக்கு வேல்மணி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும், ஹரீஸ் என்ற மகனும் உள்ளனர்.
தமிழ்ச்செல்வனின் தங்கையின் மகன் சுதர்சனை கீர்த்தனா காதலித்து வந்துள்ளார். இதற்கு தமிழ்ச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். தந்தையின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் கீர்த்தனா அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மன வேதனையடைந்த தமிழ்ச் செல்வன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.