செய்திகள்

காதலித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு - வாலிபர் கைது

Published On 2019-05-14 10:54 GMT   |   Update On 2019-05-14 10:54 GMT
கும்பகோணம் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கும்பகோணம்:

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பெரப்படி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சேகர் மகன் புவியரசன் (வயது26). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை 5 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டாராம். இதனால் காதலித்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் பறிக்கப்பட்ட இளம்பெண் புகார் செய்தார்.

அதன் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புவியரசனை கைது செய்தனர்.
Tags:    

Similar News