செய்திகள்

ஈரோட்டில் த.மா.கா.வினர் காங்கிரஸ் தலைவர் அழகிரி படத்தை எரித்து போராட்டம்

Published On 2019-05-11 10:11 GMT   |   Update On 2019-05-11 10:11 GMT
ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் தலைவர் அழகிரி படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு:

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கடந்த சில தினங்களுக்கு முன்பு த.மா.கா, பாரதிய ஜனதாவுடன் இணைப்பது தற்கொலைக்கு சமம். அதற்கு பதிலாக த.மா.கா.வினர் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ரவுண்டானாவில் ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ் தலைமையில் த.மா.கா.வினர் திரண்டனர். பின்னர் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். அப்போது திடீரென அழகிரி உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News