செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் புயலில் பனை மரங்கள் விழுந்ததால் நுங்கு விலை உயர்வு

Published On 2019-05-10 13:57 GMT   |   Update On 2019-05-10 13:57 GMT
வேதாரண்யம் பகுதியில் கஜா புயலில் பனை மரங்கள் விழுந்ததால் நுங்கு விலை அதிகரித்துள்ளது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி, கோவில்பத்து வெள்ளம்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, மணக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பனை மற்றும் தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் இருந்தன. இவை அணைத்தும் கஜா புயலில் விழுந்து விட்டது.

இதனால் கோடையின் வெப்பத்தை தணிக்க பனைநுங்குகளையும் இளநீரையும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வேளையில் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் விலைகொடுத்து பனை நுங்கையும், இளநீரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.

கஜா புயலின் கோரதாண்டவத்தால் பனை, தென்னை போன்ற மரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த கோடை வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அதிக அளவில் இயற்கையாக இப்பகுதியில் கிடைக்கும் பனைநுங்கு மற்றும் இளநீரை விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது பனைநுங்கு மற்றும் இளநீர் போதிய அளவு கிடைக்கவில்லை. இதனால் வெளியூரிலிருந்து வியாபாரிகள் இளநீர் மற்றும் பனைநுங்கை கொண்டு வந்து இளநீர் ரூ.40க்கும், பனைநுங்கு ரூ.10-க்கு மூன்றும் என விற்பனை செய்கிறார்கள்.

இயற்கையாக இப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இலவசமாக சாப்பிட்ட பனைநுங்கை தற்போது காசு கொடுத்து வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காசு கொடுத்தாலும் அதிக அளவில் இளநீர் மற்றும் நுங்கு கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

Tags:    

Similar News