செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம்

Published On 2019-05-10 05:54 GMT   |   Update On 2019-05-10 05:54 GMT
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். #ChandrasekarRao
ராமேசுவரம்:

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று மாலை ராமேசுவரம் வந்தார். பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு சென்ற அவர், அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புகைப்படம், அரிய ஓவியங்களை பார்வையிட்டார்.

அதன் பின்னர் சந்திர சேகரராவ் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு தங்கினார். இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இன்று காலை சந்திர சேகரராவ் ராமநாத சாமி கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராமநாதசாமி - பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கோவிலில் இருந்து அவர் பிரகார மண்டபத்தை சுற்றிப் பார்த்தார். சந்திர சேகரராவுடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

தெலுங்கானா முதல்வர் வருகையையொட்டி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. #ChandrasekarRao
Tags:    

Similar News