செய்திகள்

ஒருதலையாக காதலித்த வாலிபருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் - இளம்பெண் தற்கொலை

Published On 2019-05-09 09:18 GMT   |   Update On 2019-05-09 09:18 GMT
பேரூர் அருகே ஒருதலையாக காதலித்த வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடம் திருமணம் நடந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை பேரூர் அருகே உள்ள மாதம்பட்டி தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித் தொழிலாளி. இவரது மகள் தேவி (வயது 18). இவர் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். இந்தநிலையில் அந்த வாலிபருக்கு வேறுறொரு பெண்ணுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதனால் தேவி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தேவியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News