செய்திகள்

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

Published On 2019-05-09 09:15 GMT   |   Update On 2019-05-09 09:15 GMT
சென்னை கே.கே.நகரில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

சென்னை,கே.கே.நகர் ராணி அண்ணாநகர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சீனிவாசன். கே.கே.நகர் பஸ் டெப்போவில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பத்மாவதி, கடந்த சில நாட்களாக சீனிவாசன் அடிக்கடி விடுமுறை எடுத்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.

நேற்று மாலை போதையில் வீட்டுக்கு வந்த சீனிவாசனை, மனைவி பத்மாவதி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த சீனிவாசன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News