செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிய பா.ஜனதா பிரமுகர் கைது

Published On 2019-05-08 10:07 GMT   |   Update On 2019-05-08 10:07 GMT
திருத்துறைப்பூண்டி அருகே சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிய பா.ஜனதா பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு சாலைக்கடை பகுதியில் சில இளைஞர்கள், கடந்த 5-ந் தேதி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தாக்கி தகராறு செய்தனர்.

அப்போது பா.ஜனதா முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் மகன் பிரகாஷ் (24) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் வந்த வாகனத்தையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்ட தலைக்காடு பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (24) என்பவரை கைது செய்தனர். அவரை ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். உடன் மற்றொரு சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் சென்றார்.

அப்போது அங்கு வந்த பா.ஜனதா முன்னாள் மாவட்ட செயலாளர் கணேசன், போலீசார் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து தடுத்து நிறுத்தினார். தன் மகனை தாக்கிய சுபாஷ் சந்திர போசை அரிவாளால் வெட்ட முயன்றார்.

இதை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தடுக்க முயன்ற போது அவரது வலது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ஜனதா பிரமுகர் கணேசனை கைது செய்தனர்.
Tags:    

Similar News