செய்திகள்

சங்கரன்கோவில் அருகே 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2019-05-08 09:43 GMT   |   Update On 2019-05-08 09:43 GMT
சங்கரன்கோவில் அருகே 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

ராஜபாளையம் அருகே உள்ள சவுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் டேனியல் பிரேம் ஆனந்த். இவரது மகன் எபி (வயது14). இவன் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறைக்காக சங்கரன்கோவிலில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான். நேற்று பாட்டி வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு செல்கிறோம் என்று எபியை அழைத்துள்ளார்கள்.

அதற்கு எபி நான் வரவில்லை என்று கூறி வீட்டில் தனியாக இருந்தான். இந்த நிலையில் கோவிலுக்கு சென்ற அவனது உறவினர்கள் மாலையில் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டிற்குள் எபி தூக்கு போட்டு பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து எபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். அவன் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News