நெட்டப்பாக்கம் அருகே விஷம் குடித்து நர்சு தற்கொலை
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகூரான். இவரதுமகள் யோகேஸ்வரி (வயது22). நர்சிங் படித்து முடித்து இருந்த இவர் நர்சு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இதற்கிடையே யோகேஸ்வரி கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று யோகேஸ்வரிக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த யோகேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார்.
இதில் மயங்கி விழுந்த யோகேஸ்வரியை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்றுயோகேஸ்வரி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து யோகேஸ்வரியின் அண்ணன் சபரிநாதன் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.