செய்திகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 பவுன் நகை கொள்ளை

Published On 2019-04-30 09:23 GMT   |   Update On 2019-04-30 09:23 GMT
கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

டிபி சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் அருணா. இவர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து அருணாவை பார்ப்பதற்காக அவரது மாமா சுந்தரம், அத்தை சரோஜா ஆகியோர் சென்னை வந்தனர்.

நேற்று இரவு சொந்த ஊர் திரும்ப கோயம்பேடு பஸ் நிலையம் வந்த சுந்தரம், சரோஜா இருவரும் போளூர் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர். அப்போதுஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த அவரது கைப்பை மாயமானது. அதிலிருந்த 10சவரன் நகை, ஏ.டி.எம். கார்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சுந்தரம் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News