ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் - கலெக்டருக்கு தி.மு.க. மனு
சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. விவசாயஅணி துணை அமைப்பாளர் ஆப்பனூர் குருசாமி கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
2017-ம் ஆண்டு பருவமழை பெய்யாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பிரதமர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனர்.
15 மாதங்கள் கழித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 32 கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் அரசு செலுத்தியுள்ளது.
அதனை வழங்க போதிய அலுவலர்கள் இல்லாமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். போதிய அலுவலர்களை நியமித்து விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடலாடி தாலுகா கே.வேப்பங்குளம் பிர்கா உள்பட 40-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் காப்பீடு பதிவு செய்த விவசாயிகளுக்கு காப்பீடுத் தொகை வங்கிகணக்குகளில் அரசு செலுத்தாமல் உள்ளது.
அந்த விவசாயிகளுக்கும் நிவாரணத்தொகை கிடைப்பதற்கும் கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.