செய்திகள்

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது

Published On 2019-04-26 13:32 GMT   |   Update On 2019-04-26 13:32 GMT
ராசிபுரத்தில் நடைபெற்ற குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #RasipuramNurse
நாமக்கல்:

பெண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற ராசிபுரம் அமுதவள்ளி (50), தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமாரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன்பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளை பேரம் பேசி விற்ற நர்சு, கணவருடன் கைது செய்யப்பட்டார். 



குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய குழந்தைகளை விற்பனை செய்தவரின் கணவர் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர்.

கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் செவிலியர் பர்வின்னை போலீசார் கைது செய்துள்ளனர். #RasipuramNurse
Tags:    

Similar News