செய்திகள்

சபாநாயகர் திடீர் ஆலோசனை- தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

Published On 2019-04-26 07:35 GMT   |   Update On 2019-04-26 08:14 GMT
தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #speakerdhanapal #dinakaransupportmla
சென்னை:

சென்னையில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. 

அதன்படி, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மற்றும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #speakerdhanapal #dinakaransupportmla

Tags:    

Similar News