செய்திகள்
முக்கூடல் அருகே திருமணம் நடக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
முக்கூடல் அருகே திருமணம் நடக்காத விரக்தியில் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
முக்கூடல் அருகே உள்ள இலந்தகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வராஜ் (வயது 30). இவர் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். அவரது பெற்றோரும் செல்வராஜிக்கு பல இடங்களில் பெண் தேடினர். ஆனால் ஒரு இடத்திலும் அவருக்கு பெண் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக நேற்று செல்வராஜிக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வராஜ் விரக்தியில் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.
பெற்றோர் தட்டிப் பார்த்தும் திறக்காததால், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தனர். அப்போது செல்வராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை புஷ்பராஜ் முக்கூடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.