செய்திகள்

குருசுகுப்பத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-04-17 12:24 GMT   |   Update On 2019-04-17 12:24 GMT
குருசுகுப்பத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை குருசுகுப்பம் பிரான்சிஸ் ஆசிப் தெருவை சேர்ந்தவர் தேவராசு (வயது 55). மீனவர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தனியாக வசித்து வந்த இவர் அதே பகுதியில் வசித்து வந்த அவரது அக்காள் விஜயா அவ்வப்போது சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்து வந்தார்.

மது குடிக்கும் பழக்கம் உள்ள தேவராசு திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அவர் வீட்டில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார்.

அப்போது எதேச்சையாக வீட்டுக்கு வந்த விஜயா அங்கு தனது தம்பி தேவராசு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தேவராசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாணரப்பேட்டை அன்னை நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (27). பெயிண்டர். குடிப்பழக்கம் உள்ள இவர் கஞ்சா பழக்கத்துக்கும் ஆளானார். இதனால் எப்போதும் போதை மயக்கத்திலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சிவசங்கர் வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் சிவசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News