பாகூர் அருகே கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் பெயிண்டர் கைது
பாகூர்:
பாகூர் அருகே குருவிநத்தம் புறாக்குளம் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது29). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஆறுமுகம் (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் கத்தியால் சங்கரை வெட்டினார்.
இதுதொடர்பாக பாகூர் போலீசார் விசாரணை நடத்தி ஆறுமுகம் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கில் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வரக்கூடாது என சங்கரை மிரட்ட ஆறுமுகம் எண்ணினார்.
அதன்படி நேற்று சங்கரிடம் ஆறுமுகம் மீண்டும் தகராறு செய்துள்ளார். மேலும் தடியால் தாக்கி கோர்ட்டில் சாட்சி சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சங்கரை ஆறுமுகம் மிரட்டினார்.
இதுகுறித்து சங்கர் பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சபரி வழக்குபதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.