செய்திகள்
புதுவை சாரத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
புதுவை சாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை சாரம் திலகர் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகள் சுபா (வயது30). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிலமாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலைக்கு முயன்றார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் சுபா மட்டும் வீட்டில் தனிமையாக இருந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கோரிமேடு போலீசில் சுபாவின் அண்ணன் அண்ணாமலை புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.