செய்திகள்

அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன- மதுரை நீதிபதிகள் கருத்து

Published On 2019-03-19 10:07 GMT   |   Update On 2019-03-19 10:07 GMT
பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். #DynastyPolitics
மதுரை:

வேட்புமனுகள் குறைபாடு தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், வேட்பாளர்கள் மனு தாக்கலின்போது தேர்தல் வாக்குறுதியை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் பெற்ற பிறகும் உரிய பதில் அளிக்காத கட்சிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை, போரில் உயிரிழந்த வீரர்களுக்கான நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக தெரிவித்தனர். பாஜக, கம்யூனிஸ்ட் தவிர பிற கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக தெரிவித்தனர்.

அதன்பின்னர், நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அபராதத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டனர். #DynastyPolitics
Tags:    

Similar News