செய்திகள்
குடியாத்தம் அருகே கார் மோதி விவசாயி பலி
குடியாத்தம் அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே உள்ள சென்னாம்பள்ளியை பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது60). விவசாயி. இவர் நேற்று மாலை குடியாத்தம் காட்பாடி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த கார் முனிரத்தினம் மீது மோதியது இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் குடியாத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முனிரத்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.