செய்திகள்
செட்டிப்பாளையம் அருகே விபத்து - வாலிபர் பலி
செட்டிப்பாளையம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
செட்டிப்பாளையம் அருகே மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ரகுபதி(வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவர் மொபட்டில் மலுமிச்சம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ரகுபதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரகுபதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.