செய்திகள்
குனியமுத்தூர் அருகே மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு
குனியமுத்தூர் அருகே மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மனைவி சாவித்ரி (வயது 65). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.
பின்னர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது இவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர் கண்இமைக்கும் நேரத்தில் சாவித்ரி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.