செய்திகள்

வேதாரண்யம் அருகே அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு

Published On 2019-02-13 11:28 GMT   |   Update On 2019-02-13 11:28 GMT
வேதாரண்யம் அருகே அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தாணிகோட்டகம் கிராமத்தில் கோடியம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலை அப்பகுதி சுற்றுவட்டார கிராம மக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை கிராம மக்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவில் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். நள்ளிரவில் மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை தூக்கி கொண்டு தப்பி விட்டது தெரிய வந்தது. மேலும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமிராவையும் உடைத்துள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து வாய்மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கோவிலில் புகுந்து காணிக்கை பணத்துடன் இருந்த உண்டியலை தூக்கி சென்ற கும்பல் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News