செய்திகள்
கோயம்பேட்டில் மருத்துவ மாணவர் கஞ்சாவுடன் கைது
கோயம்பேடு அருகே கஞ்சாவுடன் மருத்துவ மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கோயம்பேடு நூறடி சாலையில் இன்று காலை கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தனியார் வணிக வளாகம் முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து அவரது பையை சோதனை செய்தனர்.
அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நஜூமோன்மியா (வயது20) என்பதும் பாண்டிச்சேரியில் தங்கி மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நஜூமோன்மியா யாரிடம் இருந்து கஞ்சா பெற்றார், கல்லூரியில் உடன் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வருகிறாரா என்கிற கோனத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.