செய்திகள்

பேரணாம்பட்டு அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

Published On 2019-02-12 11:38 GMT   |   Update On 2019-02-12 11:38 GMT
பேரணாம்பட்டு அருகே சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கல்லிச்சேரியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (24).இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் விக்னேஷ் தொடர்ந்து கள்ள சாராயம் விற்று வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. பிரவேஷ்குமார் கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார். எஸ்.பி பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ராமன் விக்னேஷ்சை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து வேலூர் ஜெயிலில் இருந்த விக்னேஷிடம் குண்டர் தடுப்பு சட்ட நகலை நேற்று மாலை போலீசார் வழங்கினர்.

Tags:    

Similar News